Workers of all countries, Oppressed nations unite!

Tuesday 18 November 2008

இராஜபட்சியின் இந்திய விஜயத்தை எதிர்த்து ம.ஜ.க.சுவரொட்டிப் போராட்டம்

புதுடில்லியில் மகிந்த ராஜபக்ச திட்டவட்ட அறிவிப்பு
போரை நிறுத்தவே முடியாது
[வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:48 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
இலங்கையின் போரை நிறுத்தவே முடியாது- ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பேன் என்று இந்தியத் தலைநகர் புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார். புதுடில்லி சென்றுள்ள மகிந்த ராஜபக்ச இன்று அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:
1) தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் போரை நிறுத்த முடியும்.
2) இலங்கையில் வாழும் தமிழர்கள் என் நாட்டு குடிமக்கள். அவர்களைப் பாதுகாப்பது எனது பணி என்பதை இந்தியப் பிரதமருக்கும் உலக நாடுகளுக்கும் தெரிவிக்கிறேன்.
3) இந்தியாவில் பயிற்சி பெற்ற 1,200 தமிழர்களை சிறிலங்கா படையில் இணைத்துக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.

No comments: