Workers of all countries, Oppressed nations unite!

Wednesday 22 April 2009

மே 1 2009 பொதுக்கூட்டம் ஊர்வலம்! வாருங்கள்! விடுதலை வேண்டி முழங்குங்கள்!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, இளைஞர்களே, மாணவ மாணவியரே, முற்போக்கு அறிவு ஜீவிகளே!
2009 ஆண்டின் மே தினம் உலகெங்கும் புரட்சிகர கொந்தளிப்பு கொழுந்துவிட்டு எரியும் வேளையில் பிறக்கவிருக்கிறது.உலகப் பாட்டாளிவர்க்கப் படையணியின் ஒரு பகுதியான இந்திய-தமிழக பாட்டாளிவர்க்கத்தின் முன்னணிப்படையாகிய நாம், நமது காலத்தை மாற்றியமைக்கும் புரட்சிகர முழக்கங்களுடன் மே 1 2009 வெள்ளிக்கிழமை களத்தில் இறங்குகின்றோம்.எமது இவ் அரசியல் பிரச்சார பொதுக்கூட்டத்திலும், ஊர்வலத்திலும், மக்கள் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்குமாறு தங்களை உரிமையுடன் அழைக்கின்றோம்.

* உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்று சேருங்கள்!

* மார்கசிய லெனினிய மா ஓ செதுங் சிந்தனை வெல்க!!

No comments: